2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்ட, மல்லாகம் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய, நேற்று  (09) செயலிழக்கச் செய்யப்பட்டதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தூர் கிழக்கு பகுதியில், அப்பகுதி பொதுமக்கள் சிரமதானப் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தபோது, குட்டை ஒன்றில் இருந்து மேற்படி குண்டு தென்பட்டுள்ளது. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .