2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீட்டில் இருந்து ஆயுதப் பை மீட்பு

Editorial   / 2019 மே 15 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜித்தா, எஸ்.நிதர்ஷன்

கொக்குவில் - காந்தி லேனில் உள்ள வீடொன்றில் இருந்து, இன்று (15) காலை, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடங்கிய உரப் பையொன்று மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (15) காலை 6 மணிக்கு, இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, குறித்த வீட்டில் இருந்து ஆயுதங்கள் அடங்கிய உரப் பை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .