2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புத்தளம் மாவட்ட மீனவ சங்கத்தின் ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் மாவட்டத்தில் உள்ள மீனவ சங்கங்கள் கலந்து கொள்ளும் ஒன்று கூடலொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2010.10.31) புத்தளம் இபுனு பதுாதா மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் (தெதுரு ஓயா) பகுதிக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளே இதில் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளராக மீனவ ஒருங்கிணைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஒன்று கூடலின் பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .