2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிதியொதுக்கீடு

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட  ஆலங்குடா அல்ஹிஜ்ரா பிரதேச வீதிக்கு பொறல் இடுவதற்கு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவால், ஒரு இலட்சம் ரூபாய்  நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் நிரந்தர வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள முஸ்லிம் மக்கள் வாழும் குறித்த கிராமத்தின் வீதிக்கு, பொறல் இடுவதற்கு நிதியொதுக்கீடு செய்து தருமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மீரா சாஹிபு ரனீஸ், பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள், எதிர்வரும் சில தினங்களில்  ஆரம்பிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .