2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'பிணத்தோடு', 'எனது முதல் அனுபவம்'

Kogilavani   / 2012 நவம்பர் 21 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


நூறு எழும்புக் கூடு பாகங்களை வைத்து முத்தம் கொடுத்து அந்த எழும்பு பாகங்களுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

சுவீடனின் தென்மேற்கு பகுதியைசேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தனது தொடர்மாடி குடியிருப்புத் தொகுதி வீட்டில் வைத்து இந்த சேஷ்ட்டையை புரிந்துள்ளார்.

இந்த எழும்புக் கூட்டுப் பாகங்களில் 6 மண்டை ஓடுகள், முதுகெழும்பு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இறந்தவரின் அமைதியை சீர்குலைத்ததாக இப்பெண்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

'பிணத்தோடு',   'எனது முதல் அனுபவம்'  என்ற தலைப்பிடப்பட்ட குறுந்தகடொன்றையும் கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனுடன் அப்பெண் மேற்படி மண்டையோடுகளுக்கு முத்தம் கொடுப்பது போன்ற பல புகைப்படங்களையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளதாக சுவிடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இப்பெண்ணுக்கு எதிராக சுவிடனின் கோதன்பேர்க் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்பெண் தன்மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதுடன் வரலாற்றின் மீதுள்ள ஆர்வத்தால் எழும்புக்கூட்டின் பாகங்களை சேகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

'ஒழுக்கம் எனது எல்லையை வரையரை செய்கின்றது. ஏதவாது ஒன்று நடக்கும்போது அதற்கேற்ற தண்டனையை நான் வழங்குவேன்.  எனக்கு அவரைப் போன்ற ஒரு ஆண் வேண்டும்'  என்ற குறிப்பொன்றை இணையத்தளமொன்றின் கருத்துக்களத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக எழுதியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி வீட்டில் பிணங்களை சேமித்து வைக்கும் பெட்டிகளின் புகைப்படங்கள், எழும்புக்கூடுகள் அடைக்கப்பட்ட பைகள் போன்றவற்றின்
புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .