2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் அமைதிக் கல்வித் திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, கல்லூரியில், இன்று (24) காலை நடைபெற்றது.

தேசியக் கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அமைதிக் கல்வித் திட்டம் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை, திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்கள், ஆசிரிய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்தக் கற்கையைப் பூர்த்தி செய்த ஆசிரிய மாணவர்களுக்கே, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழவில் உப பீடாதிபதிகளான திருநானந்தம் ஜெயகாண்டீபன், பொ.சத்தியநாதன், விரிவுரையாளர் செ. இந்திராதேவி எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .