2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

19 இந்திய மீனவர்கள் விடுதலை

Super User   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  புதன்கிழமை(26) இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான  இந்திய மீனவர்கள் 19 பேர் வெள்ளிக்கிழமை (28) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி மீனவர்களை வெள்ளிக்கிழமை (28) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த மீனவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த 19 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து தலைமன்னார் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
அவர்களின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட அறிவித்தல் நீதிமன்றத்தில் உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைவாக விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த மீனவர்களை விடுதலை செய்தார்.

தற்போது மீனவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-இதேவேளை கடந்த 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் 5 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கைதான 21 மீனவர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பிலும்  சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .