2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வன்னி, யாழ். அரச வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வன்னி மற்றும் யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலைகளுக்கு தேவையான அம்புலன்ஸ் வண்டிகளும் நடமாடும் பற்சிகிச்சை கூடங்கள் அமைந்துள்ள வாகனங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா மாவட்ட சுகாதார திணைக்கள அலுவலகத்தில் வைத்து  வழங்கப்பட்டன.
 
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன்  உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். வவுனியா, மன்னார் முல்லைத்தீவு வைத்தியசாலைகளுக்கு  அம்புலன்ஸ் வண்டிகளும் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்கும் நடமாடும் பற்சிகிச்சை வாகனங்களும் வழங்கப்பட்டன.

இவ்வாறு வழங்கப்பட்ட இந்த வாகனங்களின் மொத்த பெறுமதி ஒரு கோடியே 52 இலட்சம் ரூபாய் என மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி சுகாதார பணிப்பாளர்கள் வாகனங்களை பொறுப்பேற்றனர்.

வடமாகாணத்தில் சுகாதார வேலைத்திட்டங்கள் நல்லமுறையில் முன்னெடுக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தெற்கே உள்ள ஒரு வைத்தியசாலைக்கு எவ்வாறான வசதிகள் உள்ளனவோ அதே வசதிகள் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவை என்பதினை நாம் உணர்ந்துள்ளோம் என வடமாகாண ஆளுநர் இந்த வைபவத்தில் பேசியபோது குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .