2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வவுனியாவில் 91 வீதமான பிரதேசங்களில் வெடிபொருள்கள் அகற்றல்

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 91 வீதமான பிரதேசங்களில் வெடிபொருள்கள் அகற்றப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி எச். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

வவுனியா  மாவட்டத்தில் இதுவரை 91 வீதமான பிரதேசங்களில் வெடிபொருள்கள் அகற்றப்பட்ட நிலையில் அங்கு மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் 8 ஆயிரத்தி 660 குடும்பங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏனைய பிரதேசங்களிலும் விரைவில் வெடிபொருள்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .