2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கூட்டமைப்புக்கு ஆதரவளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

க. அகரன்   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் உப தவிசாளர் தெரிவின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கியது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா.யோகராஜா போட்டியிட்டிருந்தார். அவரை எதிர்த்து பொதுஜன பெரமுனவின் காமினி விக்கிரமபால போட்டியிட்டிருந்தார்.

இந்நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தவிசாளர் தெரிவில் நடுநிலமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, உபதவிசாளர் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 வாக்குகள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 வாக்குகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 வாக்குகள், சுதந்திர முன்னணியின் ஒரு வாக்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா.யோகராஜா 14 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவின் காமினி விக்கிரமபாலவுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் என 6 பேர் வாக்களித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .