2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தகவல் தருபவர்களுக்கு சன்மானம்

Editorial   / 2018 ஜனவரி 09 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

இந்தப் படத்தில் உள்ள நபர் தொடர்பில் தகவல் தருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.  

   பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் திருட்டு, கொள்ளை சம்பவம் தொடர்பில் இந்த நபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ்ப்பாணம் நீதிமன்றில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆஜர்படுத்திய பின்னர், விளக்கமறியலில் வைக்க முற்பட்டபோது, நீதிமன்றில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். 

   இவர் தொடர்பில் தகவல் அறிந்தோர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல் வழங்கமுடியும்.  

சரியான தகவல் வழங்குபவர்களுக்கு, சிறந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .