2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட 5 பேர் கைது

Editorial   / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முதல் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில், வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு தூண்டியமை, வீதிகளில் தமது கட்சி சின்னங்களை வரைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழேயே, குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

அத்துடன், கோவில்குளம் வாக்களிப்பு நிலையத்துக்கு முன்னால், தேர்தல் விதிமுறையை மீறி செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பொலிஸார் ஆகியோரினால் எச்சரித்து வெளியேற்றப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .