Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 31 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட அவரது மனைவியை (வயது 46) எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு, களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த தங்கவடிவேல் பார்த்தீபன் (வயது 42) என்பவர் தம்பிலுவில் கிராமத்தில் சனிக்கிழமை (30) இரவு கோடரியால் கொத்திக் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது 46 வயதுடைய மனைவி அன்றிரவே கைதுசெய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் விவசாயி என்பதுடன், வெற்றிலை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருபவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தம்பிலுவில் கிராமம் 02ஆம் பிரிவைச் சேர்ந்த இச்சந்தேக நபர், ஏற்கெனவே திருமணம் முடித்த நிலையில் அவருக்கு 02 பிள்ளைகள் இருப்பதுடன், அவரது கணவரும் ஏற்கெனவே உயிரிழந்துள்ளார்.
இதன் பின்னர், இச்சந்தேக நபர் இரண்டாம் தடவையாக பார்த்தீபனை திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையில் நீண்டநாட்களாக தகராறு இருந்துவந்ததாக உறவினர்கள் தெரிவி;த்தனர்.
சம்பவத்தினத்தன்று கணவன் வெறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கோபமடைந்த மனைவி வீட்டிலிருந்த கோடாரியால் கணவன் மீது தாக்கியுள்ளார். இதன்போது, கணவனின் கழுத்திலும் தலையிலும் வெட்டப்பட்டு அவர் படுகாயமடைந்துள்ளார். இவரைத் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago