Menaka Mookandi / 2010 நவம்பர் 15 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர், அப்துல் அஸீஸ்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது மறை பதவியேற்பு ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் "தெயட்ட செவன" தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேசத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி, மாளிகைகாடு அல் ஹுசைன் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கரைவாகு வட்டை, வொலிவேரியன் வீட்டுத்திட்டம், சாய்ந்தமருது கமநலசேவை மத்திய நிலையம் என்பவற்றில் இன்று காலை 10.07 மணிக்கு இந்த மரங்கள் நடப்பட்டன.
இந்நிகழ்வில், திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)




9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026