Super User / 2011 ஜூன் 17 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட அநேகமான பாடசாலைகள் இன்று மாணவர்கள் வருகை இன்றிக் காணப்பட்டன.
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேரந்த பாடசாலைகளுக்கு இன்று மாணவர்கள் முற்றாக வருகை தரவில்லை என கல்முனை வலய கல்வி அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனினும், கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட நிந்தவூர் கோட்ட பாடசாலைகளுக்கு இன்று மாணவர்கள் சமூகமளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை வலயப் பாடசாலைகளிலுள்ள 186 ஆசிரியர்களுக்கு வெளி வலயங்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 75 பேர் பெண்களாவர்.
அதேவேளை, இந்த வலயத்தினைச் சேர்ந்த 131 ஆசிரியர்களுக்கு உள்ளக இடமாற்ற கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 Mar 2026