A.K.M. Ramzy / 2020 நவம்பர் 19 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை:
சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் புதன்கிழமை வந்த முதல்வர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்துப் போராடி வருகிறது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விடுதலையாவதால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வருவது எந்த மாற்றத்தை யும் ஏற்படுத்தாது.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago