2024 மே 03, வெள்ளிக்கிழமை

சம்பியனானது திருக்கோவில் உதயசூரியன் வி.க

ஏ.எல்.எம்.சினாஸ்   / 2019 ஜூன் 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாண்டிருப்பு விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான கிரிக்கெட் தொடரில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

பாண்டிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் பாண்டிருப்பு விளையாட்டுக் கழகத் தலைவர் என். சங்கீர்த் தலைமையில் நடைபெற்ற 32 கழகங்கள் பங்கேற்ற எட்டு ஓவர்கள் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகத்தை வென்றே திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம், எட்டு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 75 ஓட்டங்களை வெற்றியிலகாகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகம் எட்டு ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று 30 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 இறுதிப் போட்டியைத் தொடர்ந்து என். சங்கீர்த் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பாண்டிருப்பு விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் என். குமாரசூரியம், கழக ஆலோசகர் எஸ். தருமலிங்கம் ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .