Niroshini / 2016 ஜூலை 16 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை மற்றும் மீஹத்தென்ன ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரு வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கேகாலை, கலிகமுவ பகுதியில் நேற்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த வானொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த நபர்களை கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில், அக்குரணை - வறாகஸ்ஸியன்ன பகுதியைச் சேர்ந்த மொஹமட் அமீர் ஒமர் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மீஹத்தென்ன ஹொரவல-பிடிகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரகலயிலிருந்து பெலவத்த நோக்கி சிறிய ரக கெப் வாகனமொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கல்முல்ல-மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த விஜயகுமார(வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025