2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஐ.நா. சிக்கல்களுக்கு முடிவை விரும்பும் இலங்கை அரசு

Super User   / 2010 ஜூலை 08 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உடனடி முடிவை எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தடங்கல் எதனையும் ஏற்படுத்தாது எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பீரிஸ், "அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது எந்தவொரு குழுவினதும் ஜனநாயக உரிமையாகும். அந்த அடிப்படையில் அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்தை தடங்கல் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது" எனவும் கூறியுள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • Saleem Friday, 09 July 2010 02:33 AM

    ஐ.நா. ஊழியர்களுக்கும் அலுவலகம் புக வெளியில் வர உரிமை இருக்கிறது.

    Reply : 0       0

    koneswaransaro Friday, 09 July 2010 02:02 PM

    சிக்கல்களை விதைத்தவர் யார் என்று அமைச்சருக்குப் புரியாதா? போலிஸ் பதிவு சம்பந்தமாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம், அமைதி ஊர்வலம், உண்ணாவிரதம் என்று கொழும்பில் நடத்தினால் அந்த உரிமையை ஜனநாயகம் என்று அமைச்சரும் அவரது அரசும் ஏற்றுக்கொள்ளுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X