Editorial / 2018 செப்டெம்பர் 02 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நின்ஜா எனப்படும் பாதாளக் குழுவின் “ சூட்டா” என்ற நபர் தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பியன்வல- கடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து தன்னியக்க துப்பாக்கி ஒன்றும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் அங்கொட லொக்கா என்ற பாதாள குழுத் தலைவருடன் நெருக்கமானவர் எனவும், இவருடன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட, துவான் என்ற சந்தேகநபர் தற்சமயம் சிறைத் தண்டனைப் பெற்று வருகிறாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சூட்டாவிடம் பல்வேறு பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 minute ago
31 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
1 hours ago
2 hours ago