2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பா‌ர்வ‌திய‌ம்மா‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற ‌விரு‌ம்ப‌வி‌ல்லை; ம‌த்‌‌திய அரசு ப‌தி‌ல்

Menaka Mookandi   / 2010 ஜூலை 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த்தின் தலைவ‌ர் பிரபாகர‌னி‌ன் தாயாரான பா‌ர்வ‌திய‌ம்மா‌ள், இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சி‌கி‌ச்சை பெறுவதற்கு ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்கலான பொது நல மனு‌வி‌ற்கு ம‌த்‌திய அரசு ப‌தி‌லளி‌த்து‌ள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம், மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காகச் சென்ற பார்வதியம்மாள், விமான நிலையத்திலேயே அந்நாட்டு அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டார்.இதனை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தி‌ல் பொது நலன் வழக்கொன்று தொடரப்பட்டது. அதில், பார்வதியம்மாளை மலேசியாவில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இ‌ன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ம‌‌த்‌திய அரசு சா‌ர்‌பி‌‌ல் ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. அந்த பதில் மனுவில் "பிரபாகர‌னி‌ன் தாயா‌ர் பா‌ர்வ‌திய‌ம்மா‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் த‌ற்போது ‌சி‌கி‌ச்சை பெ‌ற ‌விரு‌ம்ப‌வி‌ல்லை" எ‌ன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ம‌த்‌திய அர‌சி‌ன் இ‌ந்த ப‌தி‌லை ஏ‌ற்று‌க் கொ‌ண்ட ‌நீ‌திப‌திக‌ள் வழ‌க்கு ‌விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்ததாக மேற்படி செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X