2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

அவசரகால நிலையை பிரகடனம்

Freelancer   / 2026 மார்ச் 24 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, எரிபொருள் விநியோகம் மற்றும் எரிசக்தி ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தேசிய எரிசக்தி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நிறைவேற்று உத்தரவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், 

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் அதன் விளைவாக நாட்டின் எரிசக்தி விநியோகத்தின் இருப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள உடனடி ஆபத்தைக் கருத்திற்கொண்டு, இதன் மூலம் தேசிய எரிசக்தி அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .