Editorial / 2018 செப்டெம்பர் 09 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு உவர் நீர் வாவியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட மீனவரொவரொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (07) மீன்பிடிப்பதற்காக குறித்த வாவிக்குச் சென்றிருந்த நபர், காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, தேடுதல் பணிகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் (08), குறித்த நபர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், மகிழூர்முனை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் நவேந்திரன் (வயது 40) என்பவரென என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
52 minute ago
25 Nov 2025
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
25 Nov 2025
25 Nov 2025