2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மறுசீரமைப்பு குழு நாளை மறுதினம் கூடவுள்ளது- ஐ.தே.க அமைப்பாளர்

Super User   / 2010 மே 30 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புத் தொடர்பிலான பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக மறுசீரமைப்புக் குழு திட்டமிட்டபடி நாளை மறுதினம் கூடி ஆராயும் என அந்தக் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

மேற்படி பேச்சுவார்த்தை ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர்களுடனையே இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய மாகாணங்களின் உறுப்பினர்களுடனும் கட்சியின் மறுசீரமைப்புத் தொடர்பிலான பேச்சுவார்த்தை  பின்னர் இடம்பெறும் எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அந்தக்  கட்சி எதிர்பார்த்திருக்கிறது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .