2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ரவி கருணாநாயக்கவின் கருத்துக்கள் முட்டாள்தனமானவை- மனோ கணேசன்

Super User   / 2010 ஜூன் 12 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசு இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை  ஐக்கிய தேசிய கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்ப்பது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இவ்வாறு ரவி கருணாநாயக்க கூறுவது முட்டாள்தனம்  என நான் நினைக்கின்றேன். இவருடைய கருத்து ஐக்கிய தேசிய கட்சியின் கருத்தா என விரைவில் அதன் தலைமைத்துவம் சிறுபான்மையினத்தவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டியுள்ளார்.

இந்திய அரசு இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முயற்சிக்கின்றார்  என மனோ கணேசன் தெரிவித்தார்.(R.A)

You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 13 June 2010 08:55 PM

    தீவிரவாத சிங்களகொள்கையை இப்போது தூக்கிப்பிடித்து இனி வரும் தேர்தல்களில் சிங்கள வாக்குகளை பெறலாம் என்று ரவிகருணாநாயக உள்ள சிறுபான்மை வாக்குகளையும் இழந்து தவிக்க போகின்றார். அடுத்த முறை எம்.பி.யாக கூட வர இயலாது. மனோவின் கூற்று சரியே இந்திய மையஅரசு பிரபா இல்லாத இலங்கையில் தமிழருக்கு எவ்வாறு அரசியல் தீர்வு கொடுப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டுதான் இலங்கை அரசுக்கு முற்று முழுதான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாவிட்டால் இந்தியா பலவகைகளில் அழுத்தம் பிரயோகிக்கும், உறுதி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X