Thipaan / 2016 மார்ச் 08 , பி.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
'வட மாகாண சபையின் அனுமதி கிடைத்ததன் பின்னர் அடுத்த அமர்வின் போது, தகவலறியும் உரிமைச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்' என்று, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, அமைச்சின் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தகவலறியும் உரிமைச் சட்டமூலத்துக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக, சகல மாகாண சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.வட மாகாண சபையைத் தவிர ஏனைய மாகாண சபைகளின் அனுமதி கிடைத்தன. வட மாகாண சபை, எதிர்வரும் 10ஆம் திகதியே கூடும். அந்த மாகாண சபையின் அனுமதி கிடைத்ததன் பின்னர், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்' என்றார்.
2 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
01 Jan 2026