2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

2000 வெற்றிடங்களால் தபால் அலுவலகங்கள் மூடவேண்டி ஏற்படலாம்: த.ஊ.சங்கம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் தபால் அலுவலகங்களில் 2000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாகவும் இவை நிரப்பப்படாது போகுமாயின் தபால் அலுவலகங்களை அடுத்த வருடம் மூடவேண்டி வரலாம் எனவும் தபால் ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.

ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால் அலுவலகங்களில் கடமைகளில் ஒழுங்கான கட்டமைப்பை பேண முடியாதுள்ளதாக தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் பண்டார கூறினார்.

தபால் அலுவலகங்களில் போதிய ஆளணி இல்லாததால் தபால் அனுப்புதல் போன்ற அடிப்படை வேலைகள் மட்டுமே நடக்கின்றன. இந்த போக்கு தொடருமாயின் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுவிடும். அப்போது நாம் வேறு வேலை தேடி வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.

1800 புதிய ஊழியர்களை நியமிக்க பரீட்சை வைக்கப்பட்டு பெறுபேறும் வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும் புதிய நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது காணப்படும் நிதி, நிர்வாக தடைகள் அகற்றப்படாதுவிடின் தபால் திணைக்களம் விரைவில் மூடப்படலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X