Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறையிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று வெள்ளிக்கிழமை தன்னை பார்வையிடச் வந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு தேநீர் வழங்கி உபசரித்துள்ளார்.
வெலிக்கடை சிறையிலுள்ள சரத் பொன்சேகாவுக்கு மின்சார கேத்தலொன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகாவே தேநீர் தயாரித்து தயாசிறி ஜயசேகரவுக்கு வழங்கியுள்ளார்.
சரத் பொன்சேகா மத அனுஷ்டானங்களுடன் சிறையில் நாட்களை ஆரம்பிப்பதாகவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களால் கொண்டு வந்து கொடுக்கப்பட்ட புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகளை சரத் பொன்சேகா வாசித்து வருவதுடன், ஓய்வுநேரங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago