Super User / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நம்பவர் 20ஆம் திகதி கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் வைபவமொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விவாதம் குழு நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் பரிசில்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினம் கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது
27 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
2 hours ago