Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 15 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சாட்சியமளிக்கும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
எமது கட்சி சாட்சியமளிப்பது குறித்து ஏற்கனவே ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளோம். இந்நிலையில், ஆணைக்குழுவின் நேர ஒதுக்கீட்டுக்காக எமது கட்சி எதிர்பாத்துக்கொண்டிருக்கின்றது என்றார் அமைச்சர் றிசாட் பதியுதீன்.
இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சாட்சியமளிக்கவுள்ளார்.
2002ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தலைமையில் 8 பேரைக் கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago