Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இடம்பெறுவதாகக் கூறப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐ.நா. தலையிட வேண்டுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை இன்றுகையளித்தது.
ஐ.நாவை தலையிடக் கோரவும் மாணவர்கள் மீதான தொந்தரவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இக்கடிதத்தை கையளித்ததாக மேற்படி ஒன்றியத்தின் தலைவர் சஞ்சீவ பண்டார டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் உயர்கல்வித்துறை அதிகாரிகளாலும் அரசாங்கத்தினாலும் தொந்தரவுக்குள்ளாக்கப்படுவதாக அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்யான குற்றச்சாட்டு காரணமாக சுமார் 300 மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. (Pix by: Pradeep Dilrukshana)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
17 minute ago
24 minute ago