Super User / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
சுவிஸ் சிவராம் நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் 'சிவராம் மறைவின் பின் 6 வருடங்கள் : ஸ்ரீலங்காவின் ஊடக சுதந்திரமும் சட்ட அமுலாக்கமும்' எனும் தலைப்பில் நினைவுப் பேருரையொன்று நடைபெறவுள்ளது.
இதில், சுவிட்ஸர்லாந்தில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஸ்தாபக தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுனந்த தேசப்பிரிய உரையாற்றவுள்ளார்.
இம்மாதம் 24ஆம்திகதி பிற்பகல் 3.30 மணிக்கு பேர்ண் நகரில் Bernstrasse 171, 3052 Zollikofen (BE) இல் இந்த நினைவுப் பேருரை நடைபெறவுள்ளது.
பிரபல, சிரேஷட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராம் 2005ஆம் அண்டு ஏப்ரல் 28ஆம் திகதி இரவு கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட த.சிவராம், தராக்கி எனும் புனைப் பெயரிலும் ஆங்கில, தமிழ் ஊடகங்களில் கட்டுரைகளை எழுதி வந்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
22 Jan 2026
shifan Tuesday, 12 April 2011 07:11 AM
சிவராம் அண்ணாவின் இழப்பு நிவர்த்தி செய்ய முடியாதது..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026