Super User / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு கோரி, நாடெங்கிலுமுள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இன்று தந்திகளை அனுப்பியுள்ளனர்.
சுமார் 24,500 பேர் தந்திகளை அனுப்பியதாக சமுர்த்தி தொழிற்சங்க ஒன்றியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுனில் சுபசிங்க தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதற்கு தியாகங்களைச் செய்துள்ள நிலையில் அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு மேற்படி தந்திகளில் கோரப்பட்டுள்ளது.
5 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago