Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்னா பரனமன்ன)
7 வயதுச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருவளையிலுள்ள பூட் சிற்றிக்கு அருகில் ஆயுதமேந்திய கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுவனொருவன் பலியாகினான்.
கைது செய்யப்பட்ட இந்த 9 சந்தேக நபர்களில் 4 பொலிஸாரும் 5 சிவிலியன்களும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியில் தனது தந்தையுடன் இருந்த நிலையில் அச்சிறுவன் தற்செயலாக சுடப்பட்டுள்ளதாகவும் அச்சிறுவனின் தந்தையும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.(DM)
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026