2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

’இதுவரை 10ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்பு’

Editorial   / 2020 ஜூன் 18 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாண மாவட்ட  பாதுகாப்பு படையினரால் 10ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்

நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பில், இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி முப்படை உயர் அதிகாரிகள் தலைமையில் பலாலியில் உயர் மட்ட கூட்டமொன்று நேற்று இடம்பெற்றது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது,  “இராணுவத்தினராகிய நாங்கள் பாதுகாப்பு விடயம் தொடர்பில் மிகவும் அக்கறையாகவும் தெளிவாகவும் செயற்பட்டு வருகின்றோம். குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு விடயம்தொடர்பில் செயற்பட்டு வருகின்றார் 

அவர் பதவியேற்ற குறுகிய காலத்துக்குள் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இது போன்ற விசேட கூட்டங்கள்  முப்படையினருடன் இடம்பெற்று வருகின்றது. 

 கடந்த டிசெம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படையின் பிரதானிகளுடன் குறித்த கூட்டம் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது.

நேற்றைய தினம் விசேடமாக ஒன்றும் பேசப்படவில்லை குறிப்பாக காணி விடுவிப்பு பற்றி எந்த விடயமும் அதில் பேசப்படவில்லை ஏனெனில் நாங்கள் இன்று வரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவித்துள்ளோம்.

எங்களால் விடுவிக்கப்படக் கூடிய அனைத்து இடங்களையும் இன்றுவரை  விடுவித்துள்ளோம் எனினும் எதிர்காலத்தில் பொதுமக்களின்  காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

 எனினும் தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X