2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குகின்றது’

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபை 100,000 மில்லியன்  ரூபாய் நட்டத்தில் இயங்குவதாக, மின்சக்தி அ​மைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின்சார சபை இவ்வாறு நட்டத்தில் இயங்குவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 இலங்கை மின்சார சபை இன்று 100,000 மில்லியன்  ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாகவும் இந்த நிலைமையை மாற்றி, இந்த 100,000 மில்லியன்  ரூபாய் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு, சுயதொழிலை ஊக்குவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் இதற்கு முன்னர் எடுத்த தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமையின்  பிரதிபலனே இன்று இந்த நாடு அனுபவிக்க நேர்ந்துள்ளதென தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X