2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கை விமான சேவைக்கு புதிதாக A-321neo விமானம்

Editorial   / 2018 ஜூலை 30 , பி.ப. 04:44 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

டீ.கே.ஜீ.கபில

இலங்கை விமான சேவையில், புதிதாக சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு இன்று (30), புதிய விமானம் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, எயார் பஸ் நிறுவனத்தின், ​ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையினால் உற்பத்தி செய்யப்பட்ட, A-321neo ரக விமானமே இவ்வாறு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் காற்று எதிர்ப்பைக் குறைத்து பறக்கக்கூடிய வகையில் புதிய நிர்மாணிப்பதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் நீளம் 146 அடியும், இறக்கைகள் 117.5 அடியையும் கொண்டுள்ளதுடன், உயரம் 37.7 அடியென தெரிவிக்கப்படுகிறது.

 சுமார் 176 பயணிகளும், 6 விமான சேவை பணியாளர்களும் இதில் பயணம் செய்யக்கூடியவாறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த விமானம் நேற்று (29), கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த விமானத்தை, சுமார் 3 மணித்தியாலங்களில் பயணம் செய்யக்கூடிய சீனா, டுபாய் போற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதற்காக பயன்படுத்த உள்ளதாக, இலங்கை விமான சேவைகள் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரரா தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 1

  • Ahmas Tuesday, 31 July 2018 03:50 PM

    MASHA ALLAH

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X