R.Maheshwary / 2020 நவம்பர் 25 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் இலங்கைக்கு வர முடியாமல் இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள், தம்மை விரைவில் நாட்டுக்கு அழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மாதம் நிறைவடையும் முன்னர், தம்மை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 100க்கு அதிகமான இலங்கையர்கள் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வரும் எதிர்பார்ப்பில் இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தம்மை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், வீசா காலாவதியானவர்கள், தொழில் வீசா நிறைவுபெற்றவர்கள் என பலர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 minute ago
31 minute ago
47 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
31 minute ago
47 minute ago
53 minute ago