2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை

Editorial   / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 06:30 - 1     - {{hitsCtrl.values.hits}}

“ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை என தெரிவித்து இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளதாக“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் மக்கள் தனி ஈழத்திற்காக ஒத்துழைப்பை நல்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களின் மூத்த புதல்வர் என்று குறித்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்“ வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

“வெளிச்சம்” அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டின் தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவைத் தரும் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்திற்காக ஆதரவை வழங்குவதாகவும்,இராணுத்தினர் உயிர்தியாகம் செய்து மீட்டெடுத்த நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவும்“ அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 1

  • Gabriel Tuesday, 05 December 2017 02:34 PM

    Tamils will not accept to live as second class citizens in their own country and will not accept to be ruled by the majority Sinhalese who colonised Ceylon in very big numbers. Tamils should be given equal rights or separation and will not be ruled out.Even if the Sinhalese accept to live as brethren the Buddhist monks are the major problem in SL.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .