Freelancer / 2026 மார்ச் 02 , பி.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவத்தினர் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
தெஹ்ரானில் உள்ள கமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
அலி கமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பஹ்ரைன், கட்டார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
அதே சமயம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
அதே போல், இஸ்ரேல் விமானப்படை தளபதியின் இருப்பிடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதல்கள் கெய்பர் ஷேகான் பெலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குறிப்பிட்டுள்ளது.
ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவரது அலுவலகத்தில் இருந்தாரா? என்ற விவரம் தெரியவில்லை.
இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. R
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago