Editorial / 2017 ஜூலை 08 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை" என, புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இலங்கை உள்ளாகியுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சில குழுக்கள் இப்படியான வதந்திகளை தமது நலனுக்காக பரப்பலாம். எவ்வாறிருப்பினும், அப்படியான ஒரு நிலை ஏற்படுமாயின், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் உள்ளனரெனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .