Editorial / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, நியூசிலாந்து கானா ஆகிய நாடுகள் பொதுநலவாய ஒன்றியத்தின் கடல் மாசடைவதை தடுக்கும் அமைப்பில் (Commonwealth Clean Oceans Alliance) ஒன்றிணைந்திருப்பதாக பிரித்தானியப் பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளதாக அரசாங்க ததகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிளாஸ்ரிக்கினால் சூழல் மாசடைவதை தடுக்கும் பணியில் இவை ஒன்றிணைந்துள்ளாதாக பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளை முன்னெடுப்பதற்காக 61.4 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் நிதி ஒதுக்கீடுசெய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளில் இந்த பணிகளை மேற்கொள்வதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாக இந்த நிதி செலவிடப்படவுள்ளது.
அபிவிருத்தியடைந்த 5 நாடுகள் இந்த இலக்குகளை அடைவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago