Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூகோள ரீதியாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் மாகாணங்களில், மிக மோசமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வட மாகாணமே அமையுமென, உலக வங்கி எச்சரித்துள்ளது.
வெப்பநிலை, மழை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால், தெற்காசியாவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை, உலக வங்கி, நேற்று (20) வெளியிட்டது.
இதில், இலங்கை தொடர்பான பார்வையில், அதிகமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வடக்கு உள்ளது. குறைவான பாதிப்பு, மத்திய மாகாணத்தில் ஏற்படும்.
இதில், வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தவிர, நீர் கிடைக்கின்ற வாய்ப்பு குறைவாகவுள்ள மாகாணமாகவும், வட மாகாணம் காணப்படுகிறது. வட மாகாணமளவுக்கு, மத்திய மாகாணத்திலும், நீரின் கிடைக்கக்கூடிய தன்மை, குறைவாகக் காணப்படும்.
மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில், யாழ்ப்பாண மாவட்டமே முதலிடத்தில் உள்ளதோடு, முதல் 4 மாவட்டங்களில் 3 மாவட்டங்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டாவது இத்திலுள்ள புத்தளம் மாவட்டத்தைத் தொடர்ந்து, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. அத்தோடு, வடக்கின் ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவும் வவுனியாவும், மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் முறையே 9ஆவது, 10ஆவது இடங்களில் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago