Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி கோட்டைக்குள் அமைந்துள்ள டச்சு கால கட்டடத்தின் சுவர் நேற்று (07) இரவு இடிந்து விழுந்துள்ளது.
பழைய தபால் நிலையத்தின் ஒரு பகுதியாக காணப்பட்ட சுவரே இவ்வாறு இடிந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
எனினும், பகல் நேரத்தில் குறித்த சுவர் சரிந்திருந்தால் உயிர் இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டச்சு காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டடம் பாழடைந்த நிலையில் இருந்ததுடன், தபால் அலுவலகம் மற்றுமொரு இடத்தில் அமைந்துள்ளது.



5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago