2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் கௌரவம் இழக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் பதில்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக, அரசியல் வாழ்க்கையில், ஜனாதிபதியால் சம்பாதித்து வைக்கப்பட்டிருந்த நற்பெயரும் கௌரவமும், மிக விரைவில் இழக்கப்பட்டு வருவதாக, சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களை, ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, சபாநாயகரால் ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அதன் உள்ளடக்கங்களைத் தான் நிராகரிப்பதாக, ஜனாதிபதியால் சபாநாயகருக்கு பதில் கடிதமொன்று அனுப்பி​ வைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் அந்தப் பதில் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்படி கடிதத்தை, சபாநாயகர் அனுப்பி வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .