Editorial / 2019 ஜனவரி 28 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயளலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கக் கூடாதென, காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சிடம், கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (28) பிற்பகல் வேளையில், அவர் இந்தக் கடிதத்தைக் கையளித்தார்.
ஞானசார தேரருக்கு அவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அது, தனக்கும் நீதவானுக்கும், அரச சட்டத்தரணிகளுக்கும் அநீதி இழைப்பதாக அமையுமென்றும் எனவே, அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டாமென, சட்டமா அதிபர், நீதிமன்ற அமைச்சிடமும் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து, ஜனாதிபதியிடமும் தான் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
26 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago