2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானியில் 6 மணிக்கே கைச்சாத்திட்டார் ஜனாதிபதி

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டு, வர்த்தமானியை அச்சிடுவதற்காக அனுப்பி வைத்துள்ளார்.

இந்த அதி விசேட வர்த்தமானியில், இன்று மாலை 6 மணிக்கே, ஜனாதிபதி கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தைக் இன்று மாலை கொண்டுவந்தவுடனேயே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில் கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .