2026 பெப்ரவரி 27, வெள்ளிக்கிழமை

நாட்டை இராணுவமயமாக்க அரசாங்கம் முயற்சி

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதை சட்டமாக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் ஐ.தே.க மற்றும் சு.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவதானமாக இருக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரித்துவிட்டதாக கூறி அதனை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை களத்திலிறக்கிய அரசாங்கம், நாளை மனித கொலைகள் அதிகரிப்பதாக கூறி அதனை கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்தினரை களத்திலிறக்கும். இதுவே இராணுவமயமாக்களின் முதற்படியாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியனரால், அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த ‘ஜனபலசேன’ எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றியவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நாட்டு மக்களை ஒருவேளை உணவை மாத்திரம் உட்கொள்ளும் நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டனர் எனவும் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கரமசிங்க வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நாட்டு வளங்களை சர்வதேச நாடுகள் வாங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் மலர உள்ள தனது ஆட்சியில் நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்த நாட்டின் சொத்துக்களை, திரும்ப வாங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .