Editorial / 2020 செப்டெம்பர் 18 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
25 புதிய வனப்பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க வனப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம், மொனராகலை, காலி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வனங்கள் பெயரிடப்படவுள்ளதாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வேரகொட தெரிவித்துள்ளார்.
73,000 ஏக்கர் நிலப்பகுதிக்கும் அதிக பரப்பு இவற்றில் உள்ளடங்குகின்றதுடன், இரண்டு வாரங்களுக்குள் இவை வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளன.
நாட்டில் வன வலயங்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் வேரகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .