Editorial / 2018 ஏப்ரல் 10 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
“தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காகத் தயாரிக்கப்படவிருந்த புதிய அரசமைப்பை, வௌ்ளைவான் கடத்திச்சென்றுவிட்டது என்பதைப் பயமின்றி பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்” எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை தானே கொண்டுவரப்போவதாகத் தெரிவித்தார்.
“புதிய அரசமைப்பு ஊடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனக் வாக்குறுதியளித்து தான் எமது நல்லாட்சி ஆட்சியமைத்தது” என்றும் அவர் நினைவூட்டினார்.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற, மொழி அமைப்பு மைய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“அந்த அரசமைப்பு வரும்வரையிலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அந்த அரசமைப்பு என்பது மரத்திலிருக்கும் குருவி, மொழிச்சட்டம் என்பது கையிலிருக்கும் குருவி, கையிலிருக்கும் குருவியை நன்றாக வளர்த்து ஆளாக்க நினைக்கின்றேன்” என்றார்.
“எனவே, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் வகையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஜே.வி.பி, தனிநபர் பிரேரணையாக கொண்டுவரவுள்ளது” என்று தெரிவித்த அமைச்சர் மனோ, தமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில், அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை, எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளேன்” என்றார்.
16 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago